வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஒருவருடம் புனர்வாழ்வுப் பயிற்சியினை நிறைவு செய்த 5 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வும், ஏற்கனவே இங்கு புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்திருக்கும் தச்சுத் தொழிலினை கற்றுவந்த 25 போராளிகளுக்கு தச்சு உபகரணங்களும் வழங்கும் நிகழ்வும் இன்று (29.06.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தலைமையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர், சர்வமத குருக்கள், பின் இணைவுப் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் போராளிகள், பெற்றோர் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















