மும்மையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Savitra Durnale(வயது 25) என்ற பெண் தனது ஆறு வயது ஆண் குழந்தையான தேவராஜ்க்கு உடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததை அறிந்துள்ளனர். மேலும், குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் காயங்கள் இருந்ததால் அவரின் மரணத்தில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர், பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தாய் Savitra Durnale அளித்த வாக்கு மூலத்தில், தன் கணவன் இறந்த பிறகு, குழந்தையை வளர்க்க தன்னிடம் போதிய வசதி இல்லை எனவும், அதனால் தான் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.






