யானை தாக்கி ஒருவர் பலி!!

428

x240--kq
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.மீன்பிடிக்க சென்ற வேளையிலேயே அவரை யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிண்ணியா, புள்ளகுழிமணல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப்(பொக்கையன்) என்பவரே பலியாகியுள்ளார்.

சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.