8000 பட்டதாரிகளுக்கு அரச பதவிகள்!!

692

graduate

8000 பட்டதாரிகளை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய இது நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கமைய குறித்த பட்டதாரிகளில் 8000 பேரை அரச நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரச சேவைக்கு முதற் தடவையாக இவ்வாறான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் அளவில் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.