வெங்கல செட்டிக்குளம் கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தினால் முகத்தான்குளம் அரும்புகள் பயிலக முன்பள்ளியின் திறப்பு விழா நேற்று (29.06.2016) அந் நிதியத்தின் தலைவர் P.V.அன்ரனிற்றோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் B.C.R.பபா பாஜோன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா, செட்டிகுளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகானந்தன், பிரம்மஸ்ரீ ஐ.ராஜ் சர்மா
மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கமக்கார அமைப்புத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர்களால் முன்பள்ளியின் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










