வவுனியா சிதம்பரபுரம் முகாம் மக்களின் முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி : சிதம்பர நகர் கிராமம் உருவாக்கம்!!

683

 
வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள சிதம்பரநகர் குடியேற்ற கிராமத்திற்கான திறப்பு விழாவும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் சிதம்பரபுரம் பகுதியில் இன்று(30.06.2016) காலை 11மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மீள்குடியேற்ற புனர்வாழ்வு, இந்துகலாச்சார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராஜ், ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக,

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலக மேலதிக பிரதேச செயலாளர் திருமதி ச.கர்ணன், ஜக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர், உறுப்பினர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன்,

வடமாகாண முதலமைச்சரினால் 193 குடும்பங்களுக்கான காணி உறுதி அனுமதிப்பத்திரமவழங்கி வைக்கப்பட்டது. 13.5 மில்லியன் ரூபா செலவில் தலா 70 ஆயிரம் அரை நிர்மாண வீட்டிற்கான காணி அனுமதிப்பத்திரமே வழங்கி வைக்கப்பட்டது.

DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0019 DSC_0024 DSC_0031 DSC_0035 DSC_0044 DSC_0052 DSC_0053 DSC_0054 DSC_0055 DSC_0056 DSC_0057 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0069 DSC_0073 DSC_0075