வெங்கல செட்டிகுளம் சந்திக்கு அருகாமையில் இன்று (30.06.2016) காலை 9.00 மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.
இந்துமத அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இச் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச ஊழியர்கள், மதத் தலைவர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இவ் ஏற்பாட்டினை வெங்கல செட்டிகுளம் இந்து கலாச்சார பேரவை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-சங்கீதன்-




























