புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக ரஜினிகாந்த் வர வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுவை மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி அதிரடியாக பல விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அம்மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் சில அறிவிப்புகளைச் செய்து வருகிறார்.
அதில் ஒன்றுதான் ரஜினிக்கான அழைப்பு. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் என்ற முறையில் ரஜினி, புதுவையின் முன்னேற்றத் தூதராக (Brand Ambassador for Prosperous Pudhucherry) வர வேண்டும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார் கிரண் பேடி.
மேலும் புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கபாலி படத்தின் டிக்கெட்டுகளை ஊக்கப் பரிசாக அம்மாவட்ட கலெக்டர் வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும், இது அங்கே பெரிய அளவில் வேலை செய்துள்ளது என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.






