தேசிய பாடசாலை மட்டத்திலான 20 வயதுக்குட்பட்ட ரக்பி போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று பிரபல பாடசாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி தர்மராஜ பாடசாலை, கொழும்பு கேரி பாடசாலை மற்றும் கண்டி ட்ரின்டி கல்லூரிகளுக்கே இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளின் போது கலகம் விளைவித்தமைக்காகவே குறித்த பாடசாலைகளுக்கு இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கண்டி தர்மராஜ பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட ரக்பி அணிக்கு 9 மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு பாடசாலைகளுக்கான பயிற்சி வழங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பாடசாலையின் 7 ரக்பி வீரர்களுக்கு ஒரு வருடத்திற்கான போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கேரி பாடசாலை மற்றும் கண்டி ட்ரினிட்டி கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட ரக்பி அணிகளுக்கும் 6 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் பாடசாலை மட்டங்களில் இடம்பெற்ற ரக்பி போட்டிகளின் போது இடம்பெற்றுள்ள குழப்ப நிலை தொடர்பில், மேற்கொண்ட விசாரணைகளுக்கமையவே இவ்வாறு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.






