“சுவாதியைக் கொன்ற மிருகம்” : வட்ஸ் அப்பில் வைரலாகும் புகைப்படம்!!

615

Swathi Murder

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, பெண் பொறியாளர் சுவாதியை கொலை செய்த குற்றவாளியின் வரை படத்தினை பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில், வட்ஸ் அப்பில் குற்றவாளியின் தவறான புகைப்படம் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குற்றத்தை புரிந்த குற்றவாளியை விரைவில் நெருங்கிவிடுவோம் என சென்னை கமிஷ்னர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரண்டு வருடங்களுக்கு முன், தீவிரவாதி பன்னா இஸ்மாயில், மற்றும் பக்ருதீனுடன் கைதாகி சிறையில் இருக்கும் தீவிரவாதி பிலால் மாலிக்கின் புகைப்படத்தினை வெளியிட்டு, இவன்தான் சுவாதியை கொன்ற மிருகம் என்று செய்தி வட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன்னர் நடிகர் வய்.ஜி.மகேந்தின் தனது முகநூல் பக்கத்தில், சுவாதி என்ற என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகத்தால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என்ற பதிவினை ஷேர் செய்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.