விளையாட்டு வினையானது : 4 வயது சிறுவனின் உயிரை பறித்த பிளாஸ்டிக்!!

1097

Baloon

இந்தியாவின் ஆந்திரமாநிலத்தில் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குகட்பள்ளி அருகே உள்ள நிசாம்பேட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஸ்ரீயான் (வயது 4) சம்பவத்தன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது பிளாஸ்டிக் கவரை எடுத்து, தனது முகத்தில் மூடியுள்ளான். இந்நிலையில் முகத்தில் இறுக்கமாக மூடியதால் கவரை எடுக்க முடியாமல் சிறுவன் திணறி உள்ளான்.

இதனால் மயக்கம் அடைந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான். சிறுவனின் சத்தம் கேட்காமல் இருந்ததால் உள்ளே இருந்த பெற்றோர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

சிறுவன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் விளையாட்டு இறுதியில் விபரீதத்தில் முடிந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.