இந்து பூசாரி வெட்டிக் கொலை!!

284

Pottu-Suresh-murder
வங்கதேசத்தில் இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சமீபகாலமாக வங்கதேசத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இந்த கொலைவெறி தாக்குதலுக்கு அங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் ஜினைதா மாவட்டத்தில் இன்று காலை பூசாரி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த ஷைமானந்தா(45) என்பவர் இன்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை வீச்சரிவாளால் துடிதுடிக்க வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இந்த கொலைக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளே காரணமாக இருக்கலாம் என மாவட்ட காவல்துறை தலைவர் கோபிநாத் காஞ்சிலால் தெரிவித்துள்ளார்.