வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த “கண்காட்சியும் ஆக்கத்திறன் வெளிப்பாட்டு நிகழ்வும் நேற்று (30.06.2016) பாடசாலையின் அதிபர் திருமதி.சி.சிவசிதம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓமந்தை கோட்டக்கல்வி அதிகாரி கலந்து சிறப்பித்தார். மேலும் பாடசாலையின் வசதிப்படுத்துனர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆக்கத்திறன்கள் வெளிப்படுத்தப்பட்டது.
இப் பாடசாலை அண்மையில் உலக வங்கியினால் இடம்பெற்ற நேரடி மேற்பார்வையில் சிறப்பான இயங்கு தன்மையுடைய பாடசாலை என பாராட்டைப்பெற்றது, இப் பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என பிரதம விருந்தினரால் வாழ்த்துரை வழங்கப்பட்டது.




















