தாய், மகன் மீது குண்டு தாக்குதல் : இருவரும் படுகாயம்!!

862

1

கடுகஸ்தோட்டை – நவயாலத்தன்னை எனும் இடத்தில் நீராடச்சென்ற தாயும் மகனும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாயும் மகனும் ஆற்றில் இருக்கும் போது கரையேரமாக இருந்த ஒரு மரத்தின் கீழ்பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இதன் போது படு காயமுற்ற நிலையில் இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பந்தமாக இராணுவப்படையினர் தற்போது ஆராய்ந்து வருவதாகவும், இந்த குண்டு எப்படி வெடித்தது, எங்கிருந்து வந்தது போன்ற தகவல்கள் மர்மமாகவே உள்ளது என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

2 3