வவுனியாவில் குடும்பப் பெண் மூன்று நபர்களால் பாலியல் வன்புணர்வு!!

541

Abuse

வவுனியா புளியங்குளத்தில் 32 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் மூன்று நபர்களால் பாலியர் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 28.06.2016 இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் பகுதியில் கணவன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த குடும்பப் பெண் ஒருவருக்கே சம்பவம் நேரிட்டுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்த மூன்று நபர்கள் அப்பெண்ணின் குழந்தைகளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சாராயத்தை பருக்கி வாயை துணியால் கட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணின் தலைமுடியையும் கத்தரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் என தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.