வவுனியா ஆச்சிபுரம் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மலிங்கம் மகேந்திரன் என்ற 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
குறித்த நபரிற்கு அருகருகாமையில் இரண்டு காணிகளில் மனைவி பிள்ளைகள் ஒரு வீட்லும், குறித்த நபர் தனியாக உள்ள வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.
இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் சல வாசலில் சவ்வு வளர்ந்துள்ளது என்று தெரிவித்து சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மறுபடியும் அவ்விடத்தில் சவ்வு வளர்ந்து நோயின் தாக்கம் அதிகமாக சில மாதங்களாக காணப்பட்டுள்ளது. எனினும் வைத்திய சிகிச்சை மேற்கொள்ளமல் இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினம் இரவு மனைவி சாப்பாட்டினை கொடுத்துவிட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார். இவர் சில காலமாக தனிமையியே வாழ்ந்து வந்துள்ளார்.
இன்று காலை மனைவி வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன், நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு மரண விசாரணையினை மேற்கொள்வதற்கு சடலத்தினை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.






