வவுனியாவில் தீக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

520

Dead Body

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்த சிவபாலன் பகீரதி (25) என்ற யுவதி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மண்எண்ணை அடுப்பில் தீ ஏற்பட்டு எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று(02.07.2016) காலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த 21.06.2016 அன்று குறித்த யுவதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்எண்னை அடுப்பில் மண்எண்ணை குறைந்துள்ளது. எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மண்எண்ணை ஊற்றியபோது எதிர்பாரமல் ஏற்பட்ட தீ அடுப்பினை சுற்றி எரிந்துள்ளது.

இதை எதிர்பாராத யுவதி கையிலிருந்த மண்எண்ணை போத்திலினை வீசியுள்ளார். அப் போத்தலிலிருந்த மண்எண்ணை அவ்விடத்தில் சிந்தியபோது மேலும் தீப் பரவி உடலில் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த யவதியின் சகோதரி உடனடியாக தீயினை அணைத்து குறித்த யுவதியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுதி இரண்டிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும் நேற்று முன்தினம் திடீரென அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் சிகிச்சைப்பலனின்றி குறித்த யுவதி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தீயினால் ஏற்பட்ட மரணம் என தெரிவித்து சடலத்தினை உறவினரிடம் ஒப்படைத்துள்ளார்.