வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று காலை (03.07.2016) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடவைக் காப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு நாளாந்த சம்பளமாக 250 ரூபாவே வழங்கப்படுவதாகவும் நிரந்தரமற்ற வேலையாக காணப்படுவதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது சம்பளத்தை உயர்த்தக் கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிகளவான பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.












