மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.15 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம், சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மடு அன்னையின் அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.