வவுனியா புகையிரதக்கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் : நாங்கள் என்ன அடிமைகளா?(காணொளி)

531

 
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (03.07.2016) காலை 9.30 மணியளவில் புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எமக்கான ஒரு நாள் சம்பளம் ரூபா 250 என்பது சட்டத்திற்கு முரனானது, நாங்கள் என்ன அடிமைகளா, வேண்டும் வேண்டும் நிரந்தர நியமனம் வேண்டும் என பல்வேறு பாதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 31.05.2016 தொடக்கம் வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த நான்கு வருடகாலமாக அரசியல் பிரமுகர்கள், ஜனாதிபதி, பிரதமர், அதிகாரிகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும் இதுவரை எமக்கு எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது 5000 ரூபா சம்பள அதிகரிப்பு செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தற்போது புகையிரத கடவைகளுக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும், ஒரு சில புகையிரதக் கடவைகளில் பணியில் எவரும் ஈடுபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

1 DSC_0011 DSC_0016 DSC_0019 DSC_0023 DSC_0029 DSC_0035 DSC_0038 DSC_0042 DSC_0044 DSC_0045 DSC_0052 DSC_0061