வவுனியா மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் : சிறிதரன்!!

521

Sritharan

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அது அமைய உள்ளதாக கருதப்படும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பா.உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் ஒமந்தையிலா, தாண்டிக்குளத்திலா என்பது தொடர்பில் ஜனநாயகக் கட்சி என்பதன் அடிப்படையில் நியாய பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, இன்று சமூகமளிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களினதும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களினதும் கருத்துக்களையும் பெற்று விரைவில் மக்களுக்கான பொருளாதார மையத்தினை அமைப்போம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சரியான இடத்தினை தெரிவு செய்ததன் பிற்பாடு மிக தெளிவாக அதற்கான அஸ்த்திபாரம் இடப்படும் எனவும், ஜனநாயக கட்சி என்பதன் அடிப்படையில் அடுத்த சந்ததிக்கு இது ஒரு நல்ல விடயமாக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே முடிவு எடுப்பது ஒருவாரம் பிற்போடப்பட்டதாகவும் பா.உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.