வவுனியா ஓமந்தை வீரபத்திர ஆலய விக்கிரங்கள் இனந்தெரியாதோரால் சேதம்!!

823

 
வவுனியா ஒமந்தை வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

புரதான கோவில்களில் ஒன்றான வீரபத்திரர் கோயிலுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் சில வாரங்களுக்கு முன்னர் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இந் நிலையிலேயே இச் சிலை உடைக்கப்பட்டு சிலைக்கு அருகே காணப்பட்ட வேல்களும் முறித்து எரியப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5)