மகளின் குழந்தையை கருவில் சுமக்க போராடும் பாட்டி!!

1172

Baby

பிரித்தானியாவைச் சேர்ந்தப் பெண், தன் பிள்ளை உயிரிழந்ததால் அவரின் முட்டைக்கலத்தை வைத்து கருக்கட்டல் மேற்கொண்டு தனது பேரப்பிள்ளையை பெற்றெடுக்கும் நோக்கில் முயற்சித்து வருகிறார்

தன் பிள்ளை உயிரிழந்துள்ளதால் தன் பிள்ளையின் முதல் குழந்தையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். ஆனால் பாட்டியின் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மனித முளையவியல் ஆணையத்தின் படி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க,குறித்த 60 வயதான பாட்டியின் மகள் புற்று நோய் காரணமாக 29 வயதில்உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் இறந்த மகளின் முட்டைகலத்தை வைத்து கருக்கட்டல் மேற்கொள்வது சிறந்தது அல்ல,அத்துடன் பாட்டி தன் மகள் பற்றி எந்த விடயமும் ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்றும் மேன்முறையீட்டு நீதிபதிகள் இந்த விடயத்தை நிராகரித்துள்ளனர்.

இந்த உறைந்த முட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மனித கருத்தரித்தல் அதிகார சபையிடம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டம் திருத்தமாக அமைய கூடியதற்கான சாத்தியமே காணப்படுவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித கருத்தரித்தல் அதிகார சபை வழங்கும் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய விரைவில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரித்தல் அதிகார சபை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்ப்பார்ப்பதாக குறித்த 60 வயது பாட்டி தெரிவித்துள்ளார்.