வவுனியாவில் 844 பயனாளிகளுக்கு உதவித்திட்டங்களை வழங்கிய அமைச்சர் சஜித் பிரேமதாஸ!!

547

 
வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ ‘செமட்ட செவன’ தேசிய விடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 844 பயனாளிகளுக்கு இன்று (04.07.2016) காலை 11.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் உதவித்திட்டங்களை வழங்கி வைத்தார்.

இதன் போது ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 244 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரையிலான காசோலைகளையும் 400 பயனாளிகளுக்கு சீமந்து பக்கற்றுக்களும், 200 பயனாளிகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களையும் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கே.கே.காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சர்வமதத்தலைவர்கள், பயனாளிகள் என 700க்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் (04.07.2016) காலை 9.00 மணியளவில் மன்னாரிலும் ‘செமட்ட செவன’ தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0088 DSC_0090 DSC_0092 DSC_0093 DSC_0095 DSC_0104 DSC_0105 DSC_0109 DSC_0111 DSC_0112 DSC_0116 DSC_0117 DSC_0118 DSC_0119 DSC_0121 DSC_0122 DSC_0123 DSC_0125 DSC_0127 DSC_0130 DSC_0132 DSC_0133 DSC_0136 DSC_0137 DSC_0140 DSC_0145 DSC_0150 DSC_0154 DSC_0155 DSC_0157 DSC_0159 DSC_0162 DSC_0166 DSC_0169 DSC_0174 DSC_0177 DSC_0181 DSC_0182