வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த இருவர் பொலிஸாரினால் கைது!!

742

kanja

வவுனியாவில் இருவேறு பிரதேசங்களில் மூவாயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இருவரைப் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என யாழ். பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

வவுனியா வேப்பங்குளம் பிரதேசத்தில் ஆயிரம் கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் கடந்த 14ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இரண்டாயிரம் கிராம் போதைப் பொருளை வைத்திருந்த வவுனியா புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த நபரொருவரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்.