துப்பாக்கி தவறுதலாக வெடித்து வன பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு!!

610

1 (58)

ஹம்பாந்டே்டை, வல்சபுகல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவருடன் போராடும் போது, உத்தியோகபூர்வ துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை, சிலர் சட்டவிரோதமாக மிருக வேட்டையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 05 பேர் கொண்ட வன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சென்றுள்ளனர்.

இதன்போது தப்பிக்க முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை தடுக்க போராடிய வன பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.இதில் காயமடைந்த வன பாதுகாப்பு அதிகாரி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக எமது அத தெரண செய்தியாளர் கூறினார்.48 வயதுடைய கிரம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.அத்துடன் உயிரிழந்த நிலையில் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.