வவுனியா போகஸ்வேவ, தந்திரிமலை போன்ற பகுதியில் நேற்று மாலை புதையல் தோண்டிய பெண் உட்பட ஏழு பேரை நாமல்கம பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா போகஸ்வேவ தந்திரிமலை நந்தமித்தகம பகுதியிலுள்ள கற்பகுதிகளுக்கு அருகில் நேற்று மாலை புதையல் தோண்டுவதாக பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பெண் உட்பட எழுபேரை நமக்கம பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கில் என்பனவற்றை பொலிசார் கைப்பற்றி இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.






