வவுனியா பொலிஸார் கடமை நேரத்தில் தமது கடமையில் கவனம் செலுத்துவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதி வங்கிகளுக்கு முன் பக்கமாக வாகனங்கள் நிறுத்தத்தடை என பாதாகையிடப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்கின்றன.
இதற்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் கடமையிலிருக்கின்ற போதும் இவ்விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை
.
இவ் விடயம் தொடர்பாக தனியார் வங்கியொன்றில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில்..
இவ்வாறு வாகனம் நிறுத்தத்தடை என பாதகையிடப்பட்ட இடத்தில் வாகனங்கள் தரித்து நிற்க்கின்றன. போக்குவரத்துப் பொலிஸார் அப்பாவி மக்களிடம் தேவையற்ற காரணத்தினை கூறி தண்டப்பணம் அறவிடுகின்றனர். ஆனால் தமது கடமையை ஒழுங்காக செய்வதில்லை எனத் தெரிவித்தார்.