வவுனியா கல்மடு காட்டுப் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட146 முதிரைப் பலகைகளை நெளுக்குளம் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் ஒரு கப் ரக வாகனத்தையும் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்ட்ட சந்தேகநபர் மடுப்பிரதேசத்தில் சின்ன பண்டிவிரிச்சான் பகுதியைச்சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட முத்திரைப் பலகைகளின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் பெறுமதியானது என வவுனியா பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றும் தங்களால் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொலிசார்..
முதிரைப் மரப்பலகைகளை ஏற்றி வந்த கப் ரக வாகனத்தை பொலிசார் மறித்த போது நிற்காமல் சென்றதன் காரணமாக குறித்த வாகனத்தை விரட்டி வந்த பொலிசார் வவுனியா புகையிரதக் கடவையின் வாயில் புகையிரதம் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் குறித்த கப் ரக வாகனம் அதனை ஓட்டிச்சென்ற சாரதி உட்பட முதிரைக்குற்றிகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிசார் முதற்கட்ட விசாரணையில் குறித்த முதிரைப் பலகைகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்ல இருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.
இந் நடவடிக்கையில் நெடுக்குளம் பொலிஸ் அதிகாரி ஏ.எம்.எஸ் அத்தநாயக்க தலைமையிலான கான்ஸ்டபிள்களான வீரசிங்க (34690), ரூபசிங்க (53595), பியந்த(38178), ஜனக (68968), ஜெயதுங்க (20211), நிரோசன்(88567) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.












