
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பியகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவனருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொண்டவிசாரணைகளின் போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளாமல்இருப்பதற்காக சந்தேக நபரிடம் இருந்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பத்தாயிரம்ரூபாயை லஞ்சமாக கோரியதாகவும், இதன்போது சந்தேகநபர் 5000 ரூபாயை முற்பணமாகவழங்கியுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மிகுதிப்பணமான 5000 ரூபாயை பியகம பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்துபெறும் சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் காஸ்டபிளை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுஅதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதேவேளை சந்தேக நபரான பொலிஸ் காஸ்டபிளை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





