
தற்போது வரை சொந்த இடங்கள் இல்லாமல் இருக்கும் அரச பணியாளர்களுக்கு இடங்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன நாடு பூராகவும்உள்ள அபிவிருத்தி பணியாளர்களின் செயற்பாடுகளை அதிகரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




