வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி!!

440

6506_content_61222331517359371-f6bf-4488-9b8b-43535de533c7_S_secvpf
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப்பள்ளிவாசலில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 39 வயதுடைய கே.எம்.நாஸ்கீன் என மூதூர் பொலிஸார் கூறியுள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த நபர் அவரது மைத்துனரைக் கட்டுத் துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.