சென்னையில் கடந்த 7 ஆம் திகதி காலை வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் சென்ற மாணவி பிரியதர்ஷினி திடீரென பேருந்தில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், அந்த விசாரணையில், மாணவி பிரியதர்ஷினி படித்த அதே கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வந்த அரவிந்த் (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி பிரியதர்ஷினி எழுதி வைத்த 3 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
“டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேசக் கூடாதோ அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட. இருந்தாலும் எனக்கு உன்மேல இருந்த லவ் குறையல. நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை. அதை என்னால் மறக்க முடியல. என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல.
ஆனா இப்போ என்னோட உயிர கொடுத்து என் லவ்வ நிரூபிக்க போகிறேன். இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம். ஜாலியா என்ஜாய் பண்ணினோம். அது மட்டும் லவ் இல்ல. எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா, இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா, அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப் பாசம், என் லவ்வை நீ புரிஞ்சிக்கும்போது அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது. ஏனா நீ இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன். அது போதும். இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷத்தோடு நான் போறேன்டா.
எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நினைச்சியோ அப்போதே செத்துட்டேன். இது வெறும் பொணம். இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான். நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும். நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா” என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் பிரியதர்ஷினியின் காதலன் அரவிந்தை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.
பிரியதர்ஷினியும், அரவிந்தும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள அரவிந்த் மறுத்துள்ளார்.
இதனால் தான் பிரியதர்ஷினி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது, தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் அரவிந்த் மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.






