மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியின் பெரிய சந்தைக்கு முன்னால் நேற்று புதன்கிழமை இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் சிறுத்தை இறந்தது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு தேடி இச்சிறுத்தை நகருக்குள் வந்து பிரதான வீதியைக் கடக்கும்போது வாகனங்களில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சன அடர்த்தியும் எந்நேரமும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி நகரப்புறத்துக்குள் சிறுத்தை ஒன்று பிரவேசித்திருப்பதை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.!






