கடந்த இரண்டு தினங்களாக பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் சுவாதி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது.
ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் சுவாதியும், ராம் குமாரும் இல்லை என பரசுராம் என்பவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில், அந்த புகைப்படத்தில் உள்ளது எனது மகன் பிரதீப்பும் அவன் தோழியும், இடம் பாண்டிச்சேரி. இதை கடந்த ஒரு சில தினங்களாக யாரோ சில விஷமிகள் ராம்குமார்&சுவாதி என்று தவறாக இணையதளம் மூலம் பரப்பிய வருகின்றனார் இதை தயவுசெய்து நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
சுவாதி கொலை குறித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் அதிகமான வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.







