புதையல் தேடிய இருவர் வவுனியாவில் கைது

1093

வவுனியா:  புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலங்குளம் – லுனுவெவ பகுதியில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழ பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.