வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று ௦7.07.2016 வியாழக்கிழமை கற்பக விருட்ச காட்சி திருவிழா இடம்பெற்றது .
நேற்றைய உற்சவத்தில் கற்பகதரு போன்று அலங்கரிக்கபட்ட முத்துமாரியம்பாள் விநாயகர் முருகபெருமான் சகிதம் உள்வீதி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளிபாலித்த நிகழ்வு இடம்பெற்றது!