வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் இன்று(08.07.2016) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்ததுடன் நாய் சம்பவ இடத்திலேயே பலியானது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
வவுனியாவில் அண்மைக்காலமாக நாய், மாடு, ஆடு போன்ற விலங்குகளால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-கோபி-

















