வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

1437

 
வவுனியா மன்னார் வீதி பம்பைமடுவில் இன்று(08.07.2016) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்ததுடன் நாய் சம்பவ இடத்திலேயே பலியானது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக நாய், மாடு, ஆடு போன்ற விலங்குகளால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கோபி-

1 13589013_603366163156141_944418789_o 13589015_603365566489534_982632919_o 13589240_603365573156200_1541107869_o 13616199_603365376489553_103871701_o 13621822_603366066489484_42158283_o 13632904_603366159822808_333961327_o 13633254_603365193156238_347988626_o 13639395_603365433156214_313034254_o 13639526_603366246489466_660611057_o 13639965_603365173156240_1173502449_o 13646768_603366249822799_1293180309_o