பீகார் மாநிலத்தில் புதிதாக திருமணமான பெண் ஒருவர் கழிப்பறை காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்ய முன்வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்லூ அர்ச்சனா ஜோடிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் அர்ச்சனா தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார்.
கிராம பஞ்சாயத்திடம் அர்ச்சனா அளித்துள்ள புகாரில், வீட்டில் கழிப்பறை ஒன்றை கட்டும்படி பப்லூவிடம் பல முறை முறையிட்டு வருகிறேன் ஆனால் அவர் தொடர்ந்து அதை புறகணித்து வருகிறார்.
தினமும் இரவில் வெட்டவெளியை பயன்படுத்த சொல்லி பப்லூ வற்புறுத்துகிறார்.இந்நிலையில், வெட்டவெளி நிலத்தின் உரிமையாளர் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக குறை கூறியுள்ளார்.
மேலும், தனது பெற்றோரிடம் கழிப்பறை கட்டி தர சொல்லும் படி பப்லூ வற்புறுத்துவதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் கூறி கூறி நான் அலுத்து விட்டேன், அவரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன், இக்காரணத்தினால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தரும்படி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் லட்சக்கணக்கான பேரின் வீட்டில் கழிப்பறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






