நண்பர்களுக்காக கங்கையில் குதித்து உயிரிழந்த இளைஞர் : அதிர்ச்சி வீடியோ!!

590

Jump into River

நண்பர்களுக்காக விளையாட்டு தனமாக கங்கை நதியில் குதித்த இளைஞர் ஒருவர் பறிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தின் போது உடன் இருந்த நண்பர்கள் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவர் ஒடும் கங்கை நதியில் குதிக்க தயராக நின்றுக்கொண்டிருக்கிறார். அவரை சுற்றி உள்ள நண்பர்கள் வீடியோ பதிவு செய்த படி வேகமாக குதிக்கும் படி குரல் கொடுக்கின்றனர்.

பின்னர், அந்த இளைஞன் ஒடி வந்து கரைக்கு அருகே நின்று விடுகிறார். இதைதொடரந்து நண்பர்கள் அவரை திட்டி குதிக்க சொல் கின்றனர். மறுபடியும் கரைக்கு அருகில் வந்து நிற்க்கும் இளைஞர் ஓடும் நதியை பார்க்கிறார்.

இதனையடுத்து சற்று தூரம் பின்னாடி சென்று உடனே ஒடி வந்து நதியில் தலைகுப்புற குதிக்கிறார். குதித்த உடனே அவரது உடல் மேலே மிதக்கிறது. வெகுநேரமாகியும் இளைஞர் கரையேறவில்லை.

இதனால், பயந்துபோன சக நண்பர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் வந்து தேடியுள்ளனர். ஆனால், ஆற்றில் குதித்த வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது உடல் எங்கு கரை ஒதுங்கியது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் ஆற்றில் குதித்த நபர் ஹரித்வாரின் காந்த்மிர்பூர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் சவுகான் (வயது 27) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், நதியை பார்க்கும் பொழுது ஆழம் குறைவாக இருப்பது போல் தெரிகிறது. இதனால் இளைஞன் தலை தரையில் இடித்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.