வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினராக செந்தில்நாதன் மயூரன் சத்தியப்பிரமாணம்!!

869

 
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராக செந்தில்நாதன் மயூரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) காரியாலயத்தில் இன்று(09.07.2016) காலை 11 மணியளவில் இன் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 2013 வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் டெலோ அமைப்பின் சார்பாக போட்டியிட்ட செந்தில்நாதன் மயூரன் தோல்வியடைந்த போதும் வடமாகாண போக்குவரத்து மீன்பிடி, வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2013 வடமாகாணசபைத் மாபெரும் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மினுக்கு வழங்கப்பட்ட அதேவேளை எஞ்சிய ஒரு ஆசனத்தை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான EPRLF, PLOTE, TELO ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் செந்தில்நாதன் மயூரன் டெலோ கட்சி சார்பாக வவுனியாவிலிருந்து வடமாகாண சபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 3 4