இளம்பெண்ணின் உயிரைப் பறித்த தாவணி!!

531

Jaffna Girl Sucide

சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் தனது தாவணியைக் கொண்டே யுவதி துாக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சடலம் விசாரணைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்