கடத்தலில் ஈடுப்பட்ட இலங்கையர் குவைத் விமான நிலையத்தில் கைது!!

514

Kuwait Airport

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரிடம் மூன்று பைக்கற்று போதைபொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் விமான நிலையத்தில் பதற்றமான நிலையில் காணப்பட்டதாகவும் இதை அறிந்த சுங்க அதிகாரிகள் பையை சோதனையிட்ட போது போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்த போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு அறையில் வைத்து பறிமுதல் செய்துள்ளதாக அரேபிய டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.