மைத்துனியை மரணத்திலும் பின் தொடர்ந்த மைத்துனர்!!

838

Srilanka Police

திருகோணமலை, மனையாவெளி பகுதியில், இளம் பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபரொருவரின் சடலத்தை சந்தனவெட்டை காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று சனிக்கிழமை (09) மீட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்லிகைதீவு-பெரியவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கந்தசாமி சுரேந்திரன் சிவஜோதம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் சடலத்துக்கருகில் நஞ்சுப் போத்தலொன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை, மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் கணபதிப்பிள்ளை அஜந்தினியை தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே குறித்தநபர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.