சுவாதி கொலையில் அவிழாத மர்ம முடிச்சுகள் : நாளை புதிய திருப்பம்?

503

Swathi Murder

சுவாதி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை கண்டுபிடிக்க, நாளை அடையாள அணிவகுப்பு நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில், கடந்த 1ஆம் திகதி ராம்குமார் கைது செய்யப்பட்டார். இவர் கழுத்தை பிளேடால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில், நெல்லை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் ராம்குமாருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். அங்கு அவரை சந்தித்த அவர் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மிகவும் விரக்தியில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

ராம்குமார்தான் கொன்றாரா? அல்லது வேறு யாரும் கொலையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகங்கள் சமீபகாலமாக காட்டு தீ போல பரவி வரும் நிலையில், அடையாள அணி வகுப்பில் நேரில் பார்த்த சாட்சியங்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.