இன்று 10.07.2016 வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான நடராஜபெருமானுக்கு ஆனிஉத்தரத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று பின் நடராஜப்பெருமான் பார்வதி சமேதராய் ஆடியாடி வீதிவலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்
கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்
ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்