ஸ்பெயினில் மாடு பிடி விளையாட்டில் ஒருவர் பலி : வைரலாகும் வீடியோ!!

351

Spain

ஸ்பெயினின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் வீரர் ஒருவரை மாடு முட்டிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மாடு பிடி நிகழ்வு(Bull Fight). இந்நிலையில் நேற்று டெருவெல் என்ற இடத்தில் நடந்த விளையாட்டில் 29 வயதான விக்டர் பேரியோ என்ற நபர் மாடால் முட்டிக் கொல்லப்பட்டார்.

குறித்த விழாவினை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. அப்போது, பாய்ந்து வந்த மாடு விக்டரை குத்தி தூக்கிய வீசிய பின்னர், வலதுபுறமாக நெஞ்சில் குத்தியது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது, கடைசியாக 1985ம் ஆண்டில் தான் மாடுபிடி வீரர் பலியானார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.