ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கண்ணீர் வரிகள்!!

397

Nadia-Murad

ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை, யாஷிதி பெண்களை கற்பழித்தல் என பல்வேறு கொடூரங்களை செய்து வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் தாங்கள் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும் என கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
மீறினால் அவர்களுக்கு மரணம் நிச்சயம், அதுவும் மற்றவர்கள் கண்முன்னே அடுக்குமாடிகளில் இருந்து உயிருடன் தள்ளிவிடுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் யாஷிதி இன பெண்களை கடத்தி சென்று மிக கொடூரமாக பலாத்காரம் செய்கின்றனர்.

இவர்களிடமிருந்து தப்பி பிழைத்தவர்களில் ஒருவர் தான் Nadia Murad. இவரது கண்முன்னே சகோதரர்கள் ஆறு பேர் உட்பட யாஷிதி இன ஆண்களை கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து Nadia கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டேன்.மொசூல் நகருக்கு என்னை கொண்டு சென்றார்கள், அங்கே 150க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கும் அறையில் என்னை அடைத்து வைத்தனர்.

தினமும் இரவு பகல் பாராமல் எத்தனையோ தீவிரவாதிகள் வந்து என்னை தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

மூன்று மாதங்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்த பின், அங்கிருந்து அகதிகள் முகாமுக்கு தப்பி வந்தேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இது ஒரு இனப்படுகொலை என கூறியுள்ள Nadia, பிரித்தானியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.