வவுனியாவில் கிஷானா பிரதீபனால் பெருன்பான்மை இன மாணவர்களுக்கு உதவி!!

517

 
கனடாவில் வசிக்கும் கிஷானா பிரதீபன் தனது 15 ஆவது பிறந்தநாளை ஒட்டி தான் சேமித்த பணத்தை கொண்டு தனது பிறந்த நாளான நேற்று (09.07.2016) வன்னி பட்டறை ஊடாக தமிழ் விருட்சம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தந்தை இல்லாத மற்றும் வறிய சிங்கள மாணவ மாணவியர் 15 பேருக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள், பல்கலைக்கழக மாணவிக்கு பணமும், மாகாண மட்டத்துக்கு நீளம் மற்றும் உயரம் பாய்தலில் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு பாதணியும் என்பவற்றை கச்சேரி மாநாட்டு மண்டபத்த்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதம கணக்காளர் திரு.பாலகுமார், மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி லலித் ஜயசேகர, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) வன்னி பட்டறை அமைப்பின் லது, கச்சேரி அலுவலர்கள் கு.மோகனதாஸ் ஜெய்ஸ் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

1 13589115_1226932837350936_1525246147_o 13616280_1226932920684261_498844955_o 13616299_1226932087351011_195457205_o 13616335_1226947637349456_1749753862_o 13621341_1226930594017827_598033729_o 13621501_1226931804017706_737455424_o 13621552_1226934687350751_1145334641_o 13621871_1226932000684353_2027673544_o 13639419_1226931594017727_1494393178_o 13639742_1226947500682803_221311555_o 13639800_1226931954017691_2130523187_o 13646675_1226932864017600_127893692_o 13646773_1226930374017849_1506701165_o 13646982_1226931607351059_388175201_o 13647093_1226932810684272_685412231_o 13647125_1226933017350918_2061376553_o