கனடாவில் வசிக்கும் கிஷானா பிரதீபன் தனது 15 ஆவது பிறந்தநாளை ஒட்டி தான் சேமித்த பணத்தை கொண்டு தனது பிறந்த நாளான நேற்று (09.07.2016) வன்னி பட்டறை ஊடாக தமிழ் விருட்சம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தந்தை இல்லாத மற்றும் வறிய சிங்கள மாணவ மாணவியர் 15 பேருக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள், பல்கலைக்கழக மாணவிக்கு பணமும், மாகாண மட்டத்துக்கு நீளம் மற்றும் உயரம் பாய்தலில் தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு பாதணியும் என்பவற்றை கச்சேரி மாநாட்டு மண்டபத்த்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதம கணக்காளர் திரு.பாலகுமார், மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி லலித் ஜயசேகர, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) வன்னி பட்டறை அமைப்பின் லது, கச்சேரி அலுவலர்கள் கு.மோகனதாஸ் ஜெய்ஸ் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.





















